KollywoodNow

Tamil CInema Updates

பெண்களை பாலியல் பொருளாக தான் காண்பிக்கிறார்கள் – இயக்குனர் வர்ஷா;

கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் சார்பாக வெற்றிமாறன் தயாரிப்பில், வர்ஷா இயக்கத்தில், அனுராக் காஷ்யப் வழங்கும் படம் “பேட் கேர்ள்”. அஞ்சலி, சரண்யா, ஹ்ரிது ஹரூன், டீஜே அருணாசலம் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அவ்விழாவில் கலந்துக் கொண்ட பிரபலங்கள் பகிர்ந்துகொண்டதாவது,

இயக்குனர் வர்ஷா பேசும் போது

ஏழு மாதத்திற்கு முன்பு டிரைலர் வெளியீட்டு விழாவில் முதன் முதலாக மேடை ஏறினேன். அன்று முதல் இன்று வரை பல நல்ல விஷயங்கள் நடந்திருக்கிறது. இந்த படம் பல நாடுகளில் பட திருவிழாவில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. 13 நாடுகளில் 13 பட திருவிழாக்களில் பங்கேற்று வந்திருக்கிறேன். பேட் கேர்ள் பட குழுவினர் அனைவருக்கும் நன்றி முக்கியமாக இந்த வாய்ப்பு கொடுத்த வெற்றிமாறன் சாருக்கு மிக்க நன்றி.

வெளிநாடுகளில் திரையிடப்பட்டபோது அனைவரும் அங்கு கொண்டாடினார்கள். அதே நேரத்தில் இங்கு குப்பை படம் என்று கூறினார்கள். பல நாடுகளில் எழுந்து நின்று கைதட்டி மரியாதை கொடுத்தார்கள். பல நாடுகளில் சுற்றி இன்று இப்படம் பிறந்த வீட்டிற்கு வந்திருக்கிறது.

இப்படம் பிடிக்கவில்லை என்றால், அனைவருக்கும் அவரவருடைய வாழ்க்கையை வாழ்வதற்கும் முடிவெடுப்பதற்கும் உரிமை இருக்கிறது என்று ஏற்றுக்கொள்ளுங்கள்.

பல படங்களில் பெண்களை பாலியல் பொருளாக தான் காண்பிக்கிறார்கள். அதுவரை பிரச்சனை இல்லை ஆனால் பெண்கள் தங்களுக்கு என்று ஆசை விருப்பம் என்று கூறும் போது தான் பிரச்சனையாக மாறுகிறது.

பாலியல் உறவு ரீதியாக பேசக்கூடாது என்பதை விட எப்படி பேச வேண்டும் என்பது இருக்கிறது. இப்படி வெளிப்படையாக பேசினால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்குமா என்று யோசிக்காதீர்கள். உரையாடல் தான் மிகவும் உதவியாக இருக்கும்.

பெண்கள் கலாச்சாரத்தை சீரழிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். பெண்களா கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும்? கலாச்சாரம் தானே பெண்களை பாதுகாக்க வேண்டும்.

சம்பந்தமே இல்லாமல் நானும் அஞ்சலியும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு சென்றோம். எங்கள் படத்திற்கு நல்ல வரவேற்பு கொடுத்தார்கள்.

ராட்டடோம்-ல் ராம் சாருடைய படத்தை திரையிடும்போது எங்களை அழைத்து பேசிக் கொண்டிருப்பார். எங்களுக்கு மிகுந்த ஆதரவு கொடுத்தார்.

வெற்றிமாறன் சாரிடம் பணியாற்றும் போது மிகவும் கடினமாக இருக்கும். இந்த கேமராவை ஏன் இங்கே வைத்தீர்கள்? இதுபோன்று ஏதாவது கேட்டுக் கொண்டே இருப்பார். நாங்கள் அவ்வப்போது நம்பிக்கை இழந்து விடுவோம். ஆனால், அனுராக் சார் தான் இழந்த நம்பிக்கையை மீட்டுத் தருவார்.

வெற்றிமாறன் சாரிடம் கதை எழுதக் கற்றுக் கொண்டேன். தனுஷ் சாரிடம் எப்படி முடிப்பது என்பதை கற்றுக்கொண்டேன்.

இப்படத்தில் சரண்யாவின் கதாபாத்திரம் பெரிதாக பேசப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *