படம் பற்றி இயக்குனர் பாரதி சிவலிங்கம் நம்மிடையே பகிர்ந்தவை…
இது முதலாளித்துவத்திற்கு எதிரான படம். உழைப்பாளர்களுக்கு சாதி, மதம், மொழி, இனம் எதுவும் கிடையாது அனைவரும் ஒன்றுதான் என்ற கருத்தை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம்.
உலகம் வளர்ச்சி அடைய தொடங்கிய காலகட்டத்தில் இருந்து இன்று வரை நாம் பயன்படுத்தும் அனைத்தும் உழைப்பாளர்களால் கிடைத் தவைதான் அவர்கள் இல்லாது இந்த முன்னேற்றங்கள் சாத்தியமில்லை ஆனால் அப்பேர்பட்ட உழைப்பாளிகள் முதலாளித்துவம் என்ற பெயரில் எப்படியான இன்னல்களை சந்திக்கின்றனர் என்பதையும் சொல்கிறேன்.
அப்படி ஒரு குக்கிராமத்திலிருந்து குடும்ப சூழ்நிலை காரணமாக சென்னை சென்ட்ரலுக்கு வேலைக்கு வரும் நாயகன், முதலாளித்துவம் என்ற பெயரால் என்ன மாதிரியான கஷ்டங்களை அனுபவிக்கிறான் அதிலிருந்து எப்படி மீண்டு வந்தான் என்பதை உணர்ச்சிபூர்வமாக சொல்லியிருக்கிறோம் என்றார் இயக்குனர் பாரதி சிவலிங்கம்.
சென்ட்ரல் ரயில் நிலையம் எப்படி அனைவராலும் மறக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறதோ ,அதேபோல் இந்த படமும் மக்கள் மனதில் இருந்து நீங்காத இடம் பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்த படத்தின் ட்ரைலர் வெளியானவுடன் அனைவரும் எதிர்பார்க்கக் கூடிய ஒரு படமாக நிச்சயம் இருக்கும்.