நடிகை வேதிகா இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த பரதேசி படத்தில் நடித்த பிறகு தமிழில் அதிகம் நடிக்காமலிருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு தெலுங்கில் தயாராகியிருக்கும் ரசாக்கர் என்னும் புதிய படத்தில் நடித்திருக்கிறார். ஐதராபாத்தில் நடந்த ஒரு வரலாற்று சம்பவத்தை அடிப்படியாக எடுக்கப்பட்ட படம் சுதந்திரம் அடைந்த பிறகுm அந்தப்பகுதியில் இந்து முஸ்லீம் மோதல் நடந்து வந்திருக்கிறது. இதற்காக போராடி சுதந்திரக் காற்றை சுவாசித்த வரலாற்றை படமாக எடுத்திருக்கிறார்கள். ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதன் விழா சென்னையில் நடந்தது. விழாவிற்கு வந்த வேதிகா அணிந்திருந்த உடை அனைவரையும் கவர்ந்தது. எப்போதும் குடும்பப்பாங்கான உடைகளை அணிந்து வரும் வேதிகாவை இவ்வளவு க்ளாமர் உடையில் வந்தது மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தது.
கவர்ச்சி உடையில் வந்த வேதிகா