KollywoodNow

Tamil CInema Updates

டிமான்டி காலனி 3 செப்டம்பர் 11 அன்று வெளியாகிறது!*

சில திரைப்படங்களின் சீக்வல் மட்டும்தான் வெளியீடு என்பதைத் தாண்டி, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வாக மாறிவிடுகின்றன. குறிப்பாக ஹாரர் ஜானர் திரைப்படங்களில் சிலவற்றிற்க்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. உலகளவில் புகழ்பெற்ற ’தி கான்ஜூரிங்’ மற்றும் ’ஈவில் டெட்’ போன்ற திரைப்படங்களின் அடுத்தடுத்த பாகங்களை உதாரணமாக சொல்லலாம்.

இந்திய சினிமாவிலும் மிகச்சில திரைப்படங்களின் அடுத்தடு்த்த பாகங்களுக்கே இத்தகைய எதிர்பார்ப்பு இருக்கும். இந்த வரிசையில், தமிழ்த் திரையுலகிற்கு பெருமை சேர்க்கும் திகில் சீக்வல்தான் ’டிமான்டி காலனி’. சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தத் திரைப்படமும் அதன் சீக்வலும் இன்றும் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது.

திகில் ரசிகர்களுக்கு செப்டம்பர் 11 மறக்க முடியாத நாளாக மாற உள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் ’டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படத்தின் சீக்வலில் இருண்ட மற்றும் மர்மமான உலகிற்குள் மீண்டும் பார்வையாளர்கள் செல்ல இருக்கிறார்கள். அருள்நிதி கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் அஜய் ஞானமுத்து கதையை இன்னும் விரிவுபடுத்தியுள்ளார். சில கதைகள் ஒருபோதும் முடிவடைவதில்லை.

சுதன் சுந்தரம், மனிஷ் சிங்கால் மற்றும் துர்காராம் சௌத்ரி தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை அஜய் ஞானமுத்து எழுதி இயக்கியுள்ளார். படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்கள் மற்றும் திரையுலகிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. தற்போது வெளியாகியுள்ள படத்தின் வெளியீட்டு தேதி படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் பகிர்ந்து கொண்டதாவது, “முதல் பாகத்தையும் இரண்டாம் பாகத்தையும் அஜய் ஞானமுத்து இணைத்த விதம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஒரு திரைப்படத்தின் சீக்வலும் வெற்றி பெறுவது எளிதல்ல. ஆனால், ‘டிமான்டி காலனி 2’ மூலம் இயக்குநர் அதை சாத்தியப்படுத்தினார். படம் வெளியான பிறகு, ஒரு ரசிகர் என்னிடம் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். ‘தி ஷைனிங்’ பட அனுபவத்தை ‘டாக்டர் ஸ்லீப்’ எவ்வாறு தொடர்ந்ததோ, அதைப் போலவே இந்த அனுபவம் இருந்தது என்று அவர் கூறினார். அத்தகைய கருத்துகளை கேட்கும்போது, இந்த சீக்வலின் அங்கமாக நானும் இருக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் மேலும் அதிகரித்தது. இன்று ‘டிமான்டி காலனி 3’ படத்தின் ஃபைனல் வெர்ஷன் பார்த்த பிறகு, இந்தப் படத்தில் இணைந்திருப்பதை பெருமையாக உணர்கிறேன். ரசிகர்களுக்காக பல ஆச்சரியங்கள் இந்தப் படத்தில் உள்ளது. அருள்நிதி, அஜய் ஞானமுத்து மற்றும் முழு குழுவும் இந்தப் படத்தை மிகுந்த பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். விரைவில் படத்தின் விளம்பரம் மற்றும் மார்க்கெட்டிங் பணிகளை தொடங்கவுள்ளோம்” என்றார்.

ஆர்டிஎக்ஸ் மீடியா மற்றும் ஞானமுத்து பட்டறை ஆகியவற்றுடன் இணைந்து, பேஷன் ஸ்டுடியோஸின் சுதன் சுந்தரம் மற்றும் டங்கல் டிவி ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டு படம் வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *