தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.ஆனந்த் MLA அவர்களின் தலைமையில், சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் இணைப்பு விழாவில், மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.!
இந்நிகழ்வில், புதிய உறுப்பினர்களை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வரவேற்று, கழகத் துண்டுகளை வழங்கி வாழ்த்தினார்.
சேலம் மாவட்டத்தில் ஒரே மேடையில் இவ்வளவு பேர் கழகத்தில் இணைந்திருப்பது, தமிழக வெற்றிக் கழகத்தின் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் செல்வாக்கையும், தலைவர் மீது பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் உறுதிப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க அரசியல் நிகழ்வாக அமைந்தது.
இந்த மாபெரும் இணைப்பு விழாவில் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.ஆ.விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் முன்னிலை வகிக்க,
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் K.G.அருண்ராஜ் அவர்கள், மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள், மாண்புமிகு சேலம் (மேற்கு) சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.லட்சுமணன் அவர்கள், மாண்புமிகு வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.எஸ்.பழனிவேல் அவர்கள், மாண்புமிகு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.K.சிவகுமார் அவர்கள், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.N.வெங்கடேசன் அவர்கள், சேலம் தெற்கு மாவட்ட செயலாளர் திரு.R.S.மணிகண்டன், சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் திரு.K.செல்வம் அவர்கள், மாநில மகளிரணி இணை ஒருங்கிணைப்பாளர் திருமதி C. பிரியா பார்த்திபன் அவர்கள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி, வார்டு, கிளை மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், கழகத் தோழர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.